நானா பாடுவது நானா...
திரைப்படம் நூல் வேலி வெளியான தேதி 7-9-1979
தயாரிப்பு நிறுவனம் கலாகேந்திரா மூவிஸ் இயக்குநர் கே.பாலச்சந்தர்
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலாசிரியர் கவிஞர் வாலி
பாடகர்

-

பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் சரத்பாபு கதாநாயகி சுஜாதா
ஸ்ருதி F Minor ராகம் -
தாளம் 2/4 பாடல் வகை இருபாலர்
பாடலின் தன்மை காதல் குழுவினர்

-

பின்னணி இசை1: Chord 1

பெண் : நானா பாடுவது நானா... நானும் இளவயது மானா

ஆண் : வெரிகுட் (Very Good)

ஆ/பெ: (சிரிப்பு)......... ஹஹ... ஹஹ...

பெண் : நானா பாடுவது நானா.... நானும்.... இளவயது மானா

ஆண் : இசைக்கோலம் உன்மங்களம், அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம், நீ பாடு தானே வரும்
இசைக்கோலம் உன்மங்களம், அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம், நீ பாடு தானே வரும்

பெண் : நானா

ஆண் ஹா

பெண் பாடுவது நானா.... நானும்.... இளவயது மானா....

பின்னணி இசை2: 4+8(பெண்குரல்)+8

சரணம் 1 :

பெண் :கோதை என் நெஞ்சிலே, என் குடும்பம் நிற்கின்றது
நல்ல சமையல் புரிகின்றது, ஆனால் சங்கீதம் புரியவில்லை

ஆண் : சிரிப்பு ....| 2 |

பெண் : 1 1 1 1 1 1 1 1 1 1
| நிநிஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் | ததநிநி நிநிநிநி |
11 11 1 1 11
| பபதத தததத | மமபப பபபப |
1 1 1 1 1 1 1 1 11
| ,மபம, பதப, தநித | நிஸ்நீ தநிபா |

பெண் : கோதை என் நெஞ்சிலே, என் குடும்பம் நிற்கின்றது
நல்ல சமையல் புரிகின்றது, ஆனால் சங்கீதம் புரியவில்லை

ஆண் :தாயின் தாலாட்டிலே, தினம் தோன்றும் சங்கீதமே
தாயின் தாலாட்டிலே, தினம் தோன்றும் சங்கீதமே
நீயும் தாயல்லவா, இதில் ஏனோ சந்தேகமே
இதில் ஏனோ சந்தேகமே

பெண் :நானா .

ஆண் : ம்..

பெண் : பாடுவது நானா.... நானும்.... இளவயது மானா....

பின்னணி இசை3: 16 (பெண்குரல்)+8

சரணம் 2 :

பெண் :கவிஞன் சொல்லாததோ.... தமிழ் கவிதை காணாததோ
இதில் எதை நான் சொல்வேனம்மா
இந்த சபையை வெல்வேனம்மா

ஆ/பெ : 1 1 111 1 1 1 1 1
| நிநிஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் | ததநிநி நிநிநிநி |
11 111 1 11
| பபதத தததத | மமபப பபபப |
1 1 1 111 1 1 11
| ,மபம, பதப, தநித | நிஸ்நீ தநிபா |

பெண் : கவிஞன் சொல்லாதோ...தமிழ் கவிதை காணாததோ
இதில் எதை நான் சொல்வேனம்மா
இந்த சபையை வெல்வேனம்மா

ஆண் :நீந்தும் நேரம் வந்தால், உடன் நீச்சல் அங்கே வரும்
நீந்தும் நேரம் வந்தால், உடன் நீச்சல் அங்கே வரும்
பாடும் ஆசைவந்தால் எந்த பாட்டும் சபையில் வரும்
எந்த பாட்டும் சபையில் வரும்

பெண் : நானா

ஆண் : ஹஹஹ

பெண் : பாடுவது நானா.... நானும் இளவயது மானா

ஆண் : இசைக்கோலம் உன் மங்களம்
அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம்
நீ பாடு.... தானே வரும்

பெண் :நானா.... பாடுவது நானா.... நானும்... இளவயது மா.னா..
(மெல்ல)

       

More Songs

Feedback Contact Us Home